Friday, January 27, 2012

ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?





ஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்?


முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் தோன்றிய கிருத்துவமும் அதை அப்படியே சுவிகரித்து தனது பழைய ஏற்ப்பாட்டில் சேர்த்துக்கொண்டது. இதெல்லாம் முதல் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டம்.

பின்னர் ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியால் உருவாக்கப்பட்ட மதமும் ஆதாம் , ஏவாள் கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் மோசஸ், ஏசு என்று அனைவரையும் இஸ்லாமியர்களாக ஆக்கி அவர்கள் தான் இஸ்லாத்தின் ஆரம்ப கால இறைத்தூதர்கள் என்று புதிதாக ஒரு கருத்தாக்கத்தை தானே உருவாக்கிக்கொண்டு தனது பழைமைக்கு  தானே ஆதாரம் உருவாக்கிக்கொண்டது.

பாவம் மோசசுக்கு பின்னாளில் தாம் மூசா என்றும், ஏசுவுக்கு பின்னாளில் ஈசா என்றும் பெயர் மாறி இஸ்லாமியர்களாவோம் என்று தெரியாமல் போய்விட்டது :-)) தெரிந்திருந்தால் ஒரு வேளை அவர்கள் அவதரிக்காமலே இருந்து இருப்பார்கள்.முகமது நபிக்கு முன்னொடி இறைத்தூதர்கள் என சொல்லப்படும் பட்டியல் இறைத்தூதர்கள் பட்டியல. ஆதம் முதல் கொண்டு ஏசு வரை எல்லாருமே இஸ்லாமிய இறைத்தூதர்கள் என சொல்லிக்கொள்கிறார்கள். இதில் விடுபட்டுப்போனது யாஹு மெசெஞ்சர் மட்டுமே என நினைக்கிறேன் :-))

இப்படி பல முன்னோடி இறைத்தூதர்கள் உண்டு என சொல்வது புதிதல்ல ஏற்கனவே புத்த மதத்தில் 28 புத்தர்கள் உண்டு என்றும் கவுதம புத்தருக்கு பின்னரும் ஒரு புத்தர் வருங்காலத்தில் வருவார் என புத்த மதம் சொல்கிறது. ஆனால் முகம்மது நபி கொஞ்சம் முன்னேற்பாடாக அவரே அல்டிமேட் இறைத்தூதர் என சொல்லிக்கொண்டார்.

புத்தர்களின் பட்டியல

இப்போது எனது கேள்வி மனித இனம் பரிணாமத்தின் படி உருவானதா அல்லது மேற்கண்ட மதங்கள் சொன்னது போல ஆதாம்,ஏவாள் என்ற இரண்டே இரண்டு ஆதி மனிதர்களிடம் இருந்து தான் பல்கி பெருகி இன்றைய 600 கோடி மக்களாக ஆனதா என்பதே.




ஈடன் கார்டனில் ஆதாம்,ஏவாள்(படம் உதவி:விக்கி,நன்றி)



முதலில் ஆதாம் ,ஏவாள் கருத்தாக்கத்தினைப்பார்ப்போம், அது உண்மை எனக்கொண்டால் , அதனுள் இருக்கும் ஆபாசத்தினையும் மத வாதிகள் உண்மை என ஏற்றுக்கொள்வார்களா?


என்ன ஆபாசம் இருக்குனு என்று கேள்விக்கேட்பவர்கள் இந்த சுட்டியில் போய் முழுக்க ஆதியோடந்தமாக படித்து விட்டு வரவும். ஆதாம் ஏவாள் கதை- Chapter LXXIV . இங்கே பதிவில் சுருக்கமாகப்பார்ப்போம்.

கடவுள் என்று கூறப்படுவர் முதலில் ஆதாமை உருவாக்கினார், பின்னர் அவன் விலா எலும்பை வகுந்தெடுத்து அதில் இருந்து ஏவாளை உருவாக்கினார்.அவர்கள் வாழ ஏடன் கார்டனையும் உருவாக்கிக்கொடுத்தார்.

பாம்பு வடிவில் சாத்தான் எனப்படும் தீய சக்தியின் தூண்டுதலால் ஏவாள் ஆப்பிளையோ , தக்காளியையோ கடித்து வைத்து தன்னுணர்வு பெற்றாள் , போதாக்குறைக்கு ஆதமையும் கடிக்க சொல்ல இருவருக்கும் தன்னுணர்வு வரப்பெற்று, நிர்வாணம், ஆண், பெண் என்ற அறிவெல்லாம் எட்டிப்பார்த்தது.

இருவரின் கூட்டுசதியும் கடவுளுக்கு பிடிக்காமல் போனதால் அம்மையாரால் கார்டனை விட்டு விரட்டப்பட்ட சின்னம்மா போல இருவரும் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர் . கூடவே கடவுளின் சில பல சாபங்களும் இலவச இணைப்பாக கொடுக்கப்பட்டது.அச்சாபங்களில் மரணம் , முதுமை, பசி, தாகம் எல்லாம் அடக்கம்

வெளியேறிய இருவரும் ஒரு குகையில் இனிதே தனிக்குடித்தனத்தை துவக்கினர் , இல்லறத்தின் விளைவால் ஓராண்டில் கெயின் என்ற ஆண் மகவும் லுலுவா என்ற பெண் மகவுவையும் ஒரே நேரத்தில் இரட்டையர்களாக ஈன்றெடுத்தாள் ஏவாள்.

இரண்டுப்பேரும் வளர்த்து வந்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் இனிதே கழிய மீண்டும் ஒரு வாரிசு உருவாக்கம் நடைப்பெற்றது இப்போதும் பிரசவத்தில் ஒரு ஆண் , ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள். ஆண்க்குழந்தைக்கு ஏபெல் என்றும் பெண்ணுக்கு அக்லியா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

இங்கே ஒரு சின்ன குறிப்பு இரண்டாவது பிறந்த பெண் அக்லியா , லுலுவாவை விட அழகில் கொஞ்சம் குறைவு என்று கதையில் அல்லது புனித நூலில் சொல்லப்பட்டுள்ளது. இது எதுக்கு இப்போனு தோன்றலாம் ஆனால் இது ஒரு புரதான நிகழ்வுக்கு தூண்டலாக அமையப்போகிறது.

கெயின், ஏபெல் இருவரும் வளர்ந்து வாலிபப்பருவம் அடைந்தனர் அவர்களுக்கு என்று ஒரு தொழில் கொடுக்க வேண்டும் என ஆதம் முடிவெடுத்து கெயினிடம் விவசாயத்தையும் ஏபெலிடம் கால்நடை வளர்ப்பையும் ஒப்படைத்தார் ஒரு பொறுப்பான தந்தையாக.

இருவரும் தத்தமது வேலையில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்தார்கள், அதனை ஆண்டவனுக்கு படைக்கும் போது ஏபெல்லின் படையலை ஏற்று கெயினுக்கு வெறுப்பேத்தினார் கடவுள், இதனால் சகோதரர்களிடையே ஒரு பூசல் உருவானது.

இதனிடையே பொறுப்பான , பாசமிகு தாயாக ஏவாள் நம்ம பசங்க வளர்த்துட்டாங்க, தொழிலும் செய்யுறாங்க அவங்களுக்கு ஒரு கல்யாணம் செய்துப்பார்க்கலாம் என்று கணவன் ஆதமிடம் சொல்கிறாள்.

இங்கே அறிவார்ந்த மக்களுக்கு நியாயமாக ஒரு கேள்வி வரனும் , கேள்வி வந்துச்சா? உலகின் முதல் மனிதர்கள் ஆதாம், ஏவாள், அவங்களுக்கே இப்போ தான் ஆண் இரண்டு, பெண் இரண்டுனு பிறந்து உலகின் முதல் குடும்பமாக உருவாகி இருக்கு. அப்படி இருக்க அவங்க பசங்களுக்கு எங்கே இருந்து கல்யாணத்துக்கு பெண் கிடைக்கும்? இப்படி ஒரு கேள்வி எல்லாருக்கும் வந்திருக்கனும்.

கேள்விக்கு விடை என்ன , ஏவாளே சொல்கிறாள், வெண்ணைய கையில வச்சுக்கிட்டு நெய்க்கு அலைய வேண்டாம் , கெயின் கூடப்பொறந்த லுலுவாவை ஏபெலுக்கும், ஏபெல் கூடப்பொறந்த அக்லியாவை கெயினுக்கும் கல்யாணம் கட்டி வைக்கலாம்னு ஆலோசனை சொல்கிறாள்.

அனேகமாக மனைவி ஒரு மந்திரி, மனைவி சொல்லே மந்திரம் எல்லாம் அந்த புராணக்காலத்திலேயே ஆரம்பம் ஆகிடுச்சு என நினைக்கிறேன். ஆதமும் சரி அப்படியே செய்யலாம்னு தலையை ஆட்டுகிறான். பொண்டாட்டிக்கு புருஷன்மார்கள் தலை ஆட்டுவதும் அப்போவே ஆரம்பம் ஆகி இருக்குனு தெரியுது :-))

எல்லாரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்களே என்று சொல்லி பரிணாமத்தை கிண்டல் செய்யும் மார்க்கபந்துகள் எல்லாம் உணர்ச்சி வசப்படாதிங்க இதெல்லாம் நீங்க புனித நூல்னு சொல்வதில் இருப்பது தான். அதில் என்ன சொல்லி இருக்குனே தெரியாமா எல்லாம் புனிதம்னு கண் மூடித்தனமா நம்புவதால் தெரியாமல் போய் இருக்கலாம். முழுசா படிங்க, அதுக்கு அப்புறமா சொல்லுங்க எது சரினு.

மார்க்கப்பந்துக்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கும் , என்னடா இது அண்ணன் , தங்கச்சிக்க்குள்ள கல்யாணமானு, இதை தான் இத்தனை நாளா புனித நூல் சொல்லிச்சுனு நம்பி பரிணாமத்தை எதிர்த்தோமா என்றெல்லாம் கேட்டு லேசா தலைக்கூட சுத்தும் :-))

ஆதாம், ஏவாள் சூப்பராக திருமணத் திட்டம் போட்டாங்க, ஆனால் அங்கே தான் ஒரு டிவிஸ்ட் வைக்குறார் நம்ம சாத்தான். சாத்தான் அண்ணாச்சி கெயினிடம் போய் ஏற்கனவே உன் படையலை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் ஏபெல் தான் உங்க அப்பா,அம்மாவுக்கு செல்லம் ஆகிட்டார், மேலும் இப்போ உன்னோட அழகான தங்கையை ஏபெலுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு , ஏபெலின் அசிங்கமான தங்கையை உனக்கு கட்டி வைக்கப்போறாங்க எனவே நீ பேசாம உன் தம்பி ஏபேலை போட்டு தள்ளிடு , அப்புறம் நீ மட்டும் தான் உனக்கே ரெண்டு பொண்ணும் னு ஒரு நாராசமான ஐடியாவை தருகிறார் திருவாளார் சாத்தான்.

கெயினுக்கும் இது சரினு படவே , ஏபேலை நயவஞ்சகமாக பேசி வா வயலை சுத்திப்பார்க்கலாம்னு கூப்பிட்டு சென்று கல்லால் அடித்துக்கொள்கிறான். ஆகாவே புராணம்,இதிகாச வரலாற்றில் முதல் கொலைக்காரன் கெயின் ,அதுவும் சொந்த சகோதரனைக்கொன்றவன் என பிரசித்திப்பெறுகிறான்.

கெயின் ஏபேலை கொல்லும் சம்பவத்தினை விவரிக்கும் ஓவியம். படம் உதவி:விக்கி. நன்றி

பின்னர் கடவுள் கெயினுக்கு சாபம் விட்டது, மீண்டும் சேத் என்ற மகன் ஆதாம் ஏவாளுக்கு பிள்ளையாக பிறந்து அவர்கள் எல்லாரும் தமது தமக்கைகளையே மணம் புரிந்து வம்சம் விருத்தி செய்தது என புராண புனித நூல்களின் கதைப்போகிறது. நாம் இத்தோடு முடித்துக்கொண்டு மானிட குலம் முதல் இரண்டு மனிதர்களிடம் இருந்து தோன்றியது என்பது சரியா அல்லது பரிணாமவியல் தான் சரியா என்று கேள்வியுடன் துவங்குவோம் நமது அறிவார்ந்த சிந்தனையை.

மார்க்க பந்துகளே எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள் வழித்தோன்றல் தான் என்று இனியும் நம்புவிர்களானால், நீங்கள் எல்லாம் சகோதர , சகோதரிகளை மணமுடிக்க ஆர்வம் உள்ளவர்களா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் ஆம் என்று ஒத்துக்கொண்டால் உங்கள் புனித நூல் சரியாக சொல்லி இருக்கு எனலாம் :-))

ஆதாம் ஏவாள் வழிவந்ததே மனிதகுலம் எனும் சித்தாந்ததிற்கு மாற்றாக வருவது பரிணாமவியல், மைட்டோ காண்டிரியல் ஏவாள் எனப்படும் சித்தாந்தம், இது குறித்து அடுத்தப்பதிவில் பார்க்கலாம்.

பரிணாமவியலுக்கு மாற்றாக சொல்லப்படுவது அறிவார்ந்த படைப்பாக்க சித்தாந்தம் ஆகும். எப்படி ஆகினும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்பவர்கள் அனைவருமே ஒரு ஜோடி மனிதர்களிடம் இருந்து உலக மக்கள் அனைவரும் பிறந்தார்கள் என்பதை மறுக்கவே செய்கிறார்கள்.

 பதிவர் சார்வாகன் பரிணாமவியலை அறிவார்ந்த படைப்பாக்கம் என்பதன் வாயிலாக நோக்குபவர் ஆனாலும் பரிணாமம் , மைட்டோக்காண்ரியல் ஈவ் பற்றி எல்லாம் விரிவாக அலசுபவர். பரிணாமவியலுக்கு மாற்றுக்கருத்து எனினும் ஆதாம் ஏவாள் தியரி அறிவார்ந்த சித்தாந்தம் அல்ல என புரியவைக்கும் அவரதுப்பதிவுகள் விருப்பம் உடையவர்கள் அங்கு சென்று மேலதிக தகவல்கள் பெறலாம்.

1)சார்வாகன் -1

2)சார்வாகன் -2

3)சார்வாகன் -3

மேலும் விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாம் ஏவாள், மற்றும் அவர்கள் சந்ததி குறித்தான தகவல் பக்கங்களின் சுட்டி:

1)) ஆதாம் ,ஏவாள்

2) கெயின் , ஏபெல்

3))சந்ததியினர்



பிற்சேர்கை:-

சார்வாகனின் கெயினின் மனைவி யார் என்னும் பதிவு,
கெயினின் மனைவி யார்

ரெவெரி அளித்துள்ள கெயினின் மனைவி குறித்தான சுட்டி

கெயினின் மனைவி

Thursday, January 19, 2012

பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?



பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?


முன் குறிப்பு:

இது யாருடைய பதிவுக்கும் எதிர்ப்பதிவல்ல, இந்திய விவசாயம் எப்படி ஒப்பிட இயலா வகையில் பல இன்னல்களுக்கிடையேயும் நிலைத்து நின்று சுமார் 120 கோடி மக்களுக்கும் பசிக்கு உணவளிக்கும் உன்னத வேலையை இந்திய விவசாயிகள் தங்களை வருத்தி செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு பதிவே.



இந்தியா விவசாய நாடு என்று பன்னெடுங்காலமாக கூறப்படுகிறது. பிற தேசங்களில் நாடோடிகளாக ,நாகரீக வளர்ச்சியின்றி ,வேட்டை ஆடி உண்டு வாழ்ந்து வந்த காலத்திலேயே நதிக்கரை நாகரீகம் மேம்பட்டு விவசாயம் செய்து ,அதிலும் பல திருத்தங்கள் செய்தவர்கள் இந்தியர்கள். இதில் குறிப்பாக தமிழர்கள் முன்னோடிகள் எனலாம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காடு திருத்தி கழனி கண்டார்கள், கரிகால பெருவளத்தான் விவசாயத்திற்கு நீரின் தேவை அறிந்து கல்லணை கட்டியது இன்றும் நிலைத்து நிற்கிறது.

இன்றைய நவீன இந்தியாவில் வேளாண் சார்ந்த இயற்கை வளம் என்ன எனப்பார்ப்போம்.

மழைக்காலத்தில் வயலிலும் நீர் நிற்கும் வாய்க்காலிலும் தண்ணீர் கரைப்புரண்டு ஓடும், வடிய வைக்க வடிகால் காணாது, கோடையில் வாய்க்காலில் தண்ணீர் அடியில் ஓடும் வயலுக்கு ஏற்ப மடைக்கட்டி ஏற்ற வேண்டும், அதுவும் போதவில்லை எனில் டீசல் எஞ்சின் வைத்து இறைப்பார்கள். ஆனால் தண்ணீர் என்பது விவசாயத்துக்கு பெரும்பாலும் கிடைத்து விடும். இது ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம் வகை.இவ்வகை பாசனமே மிக அதிகம், கிணறு,ஆழ்குழாய் கிணறுப்பாசன விவசாயம் சிறிய அளவே.இந்தியாவில் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம், வடிகால் என இரண்டும் செய்ய தக்க அளவு நீர் வளம் உண்டு.

இந்தியா ஒரு புவியியல் பார்வை:

மொத்த நிலபரப்பு = 3,287,260 ச.கி.மீ

விவசாயம் செய்ய தக்க நிலம்=179,900 ச.கி.மீ

விளை நிலம்=1 ,586 ,500 ச.கி.மீ (88.2% & 53.%,)

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 112 செ.மீ
( மிக குறைவாக ராஜஸ்தானில் பாலைவனப்பகுதியில் 10 செ.மீ மழையும், மிக அதிகமாக(உலகிலேயே) மேகாலாயாவில் உள்ள மவ்சின் ராம் =11,87.3 செ.மீ, சிரபுஞ்சி= 11,77.7 செமீ)


மழைப்பொழிவு மொத்த நீர்   =3,700,000

நிலத்தில் இழுக்கப்படும் நீர் = 800,000

ஆற்றில் பாயும் நீர் =1,700,000

ஆவியாகும் நீர்=1,200,000

( மில்லியன் கன மீட்டரில்)

இதில் நிலத்தில் உறியப்படும் நீரும், ஆற்றில் பாயும் நீரும் விவசாயத்தேவைகளுக்கு பயன்ப்படுகிறது.

மேலும் இந்தியாவில் உள்ள நீர் நிலைகளின் மொத்தப்பரப்பளவு=314,070 ச.கி.மீ
(ஆறு,ஏரி,குளம் ,நீர்த்தேக்கம் ஆகியவைப்பரப்பளவில்)

காண்க:
india

கோதுமை சாகு படி செய்யப்படும் பரப்பளவு= 278.17

உற்பத்தி ஆகும் கோதுமை(2010) = 80 மில்லியன் மெட்ரிக் டன்.

அரிசி உற்பத்தி (2010-11)=  94.11(நெல்=145 மி.மெ.ட)



இன்ன பிற உணவு உற்பத்தியில் உலகளாவிய அளவில் இந்தியாவின் இடம்:

கீழ்கண்ட பட்டியலில் உள்ள உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது:

Lemons and limes
Buffalo milk, whole, fresh
Castor oil seed
Safflower seed
Sorghum
Millet
Spices
Okra
Jute
Beeswax
Bananas
Mangoes, mangosteens, guavas Pulses
Indigenous Buffalo Meat
Fruit, tropical
Ginger
Chick peas
Areca nuts
Other Bastfibres
Pigeon peas
Papayas
Chillies and peppers, dry
Anise, badian, fennel, corian
Goat milk, whole, fresh


கீழ்கண்டவற்றில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

Per final numbers for 2009, India is the world's second largest producer of the following agricultural produce:[41]

Wheat
Rice
Vegetables fresh
Sugar cane
Groundnuts, with shell
Lentils
Garlic
Cauliflowers and broccoli
Peas, green
Sesame seed
Cashew nuts, with shell
Silk-worm cocoons, reelable Cow milk, whole, fresh
Tea
Potatoes
Onions
Cotton lint
Cottonseed
Eggplants (aubergines)
Nutmeg, mace and cardamoms
Indigenous Goat Meat
Cabbages and other brassicas
Pumpkins, squash and gourds


In 2009, India was the world's third largest producer of eggs, oranges, coconuts, tomatoes, peas and beans.[41]

மேற்கண்டவை எல்லாம் "ரொம்ப சாதாரணமான காய்ந்து போன வறண்ட இந்தியாவில் நடக்கும் ரொம்ப சாதாரண விவசாயத்தினை" விவரிக்கும் புள்ளி விவரங்கள்.

இனி வளம் கொழிக்கும் பாலாறும் தேனாறும் கரைப்புரண்டு ஓடும் பச்சைப்பசும் சோலைவனம் சவுதி அரேபியாவின்  விவசாயத்தினைக்காண்போம்.

சவுதி அரேபியா வேளாண் வளம்:

மொத்த நிலப்பரப்பு =2, 149, 690 ச.கி.மீ

மொத்த விவசாய செய்யதக்க நிலம்=1, 736, 250 ச.கி.மீ

விளை நிலம் =34 000(2.0% , &1.6%) ச.கி.மீ

ஆண்டு சராசரி மழைப்பொழிவு= 10 செ.மீ(எப்போதாவது 30 செ.மீ)

நீர் நிலைப்பரப்பு = 0.0 ச.கி.மீ

காண்க:
saudi arabia

சவுதி அரேபிய அரசு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 1970 இல் ஒரு வேளாண் திட்டம் போட்டது ,அதன்படி ஒரு டன் கோதுமைக்கு அரசு கொள்முதல் விளையாக 3500 ரியால்களை நிர்ணயம் செய்தது இதனால் பெரிதும் கவரப்பட்ட விவசாயிகள் கோதுமை விளைச்சலில் குதித்தார்கள்.

இதன் விளைவாக 90 களில் சுமார் 4 மி.மெ.ட கோதுமை விளைந்தது.ஆனால் இதற்கான பாசன நீர் 2000 கி.மீ க்கு அப்பால் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது.ஒரு டன் கோதுமை விளைவிக்க சுமார் 1000 கன மீட்டர் நீர் தேவைப்பட்டது.

தொடர்ந்து நீரும், அதிக கொள்முதல் விலையும் கொடுப்பது அரசுக்கு பொருளாதார ரீதியாக இழப்பினை உருவாக்கவே 2008 இல் புதிய விவசாயக்கொள்கையாக , கோதுமை விவசாயத்தை ஆண்டுக்கு 12.5 சதவீதம் எனக்குறைத்து கொண்டு வந்து 2016 இல் முற்றிலும் நிறுத்தப்போவதாக அறிவித்து விட்டது. மேலும் அரசின் கொள்முதல் விலையை 1000 ரியால்கள் என அதிரடியாக குறைத்து விட்டது. இதனால் 40 சதவீத விவசாயீகள் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இதன் விளைவாக கோதுமை உற்பத்தி ஒரு மில்லியன் டன்னுக்கும் கீழே 946,000 டன் ஆக ஒரே ஆண்டில் உற்பத்தி சரிந்தது.இப்போது ஆண்டுக்கு 2 மி.மெ.ட அளவுக்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. 2016 முதல் முழுக்க இறக்குமதி செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளது சவுதி அரேபிய அரசு. மேலும் காய் கறி உற்பத்தியையும் உள்நாட்டு தேவைக்கு மட்டும் செய்ய சொல்லி, ஏற்றுமதி செய்ய தடை விதித்து விட்டது. இதன் மூலம் நீர் தேவையை குறைத்து ,அதற்கு ஆகும் செலவைக்கட்டுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இது தான் இன்றைய தேதியில் சவுதி அரேபியாவின் விவசாய கொள்கை, மற்றும் நிலை.

ஆனால் சவுதி அரேபியாவில் பாலாறும் ,தேனாறும் ஓடுவதாக பதிவுப்போட்ட விஞ்ஞானி 1990 களின் விவரத்தை மட்டும் கவனமாக சொல்லி இது போல பசுமை புரட்சி தொடர்ந்து சவுதி அரேபியாவில் பரவி வருவதாக சொல்லிக்கொண்டார்.அப்படி பரவி வருவதாக இருந்தால் இன்று ஏன் இப்படி ஆயிற்று சவுதி அரேபியாவில்.

காண்க:
விஞ்ஞானியின் பதிவு

அதுவும் மண் வளம் இல்லைனு களிமண் இறக்குமதி செய்து,,விதை இறக்கு மதி, தண்ணீர் சுத்திகரிப்பு செய்து சிக்கனமாக சொட்டு நீர், பசுமைக்குடில் வைத்து விவசாயத்தைப்பெருக்கிட்டாங்க, அதே போல இந்தியாவில் செய்யக்கற்றுக்கொள்ள வேண்டும்னு வேற சொல்லி இருந்தார்.

கோதுமை போன்றவற்றை நிலப்பயிர் (ஃபீல்ட் கிராப்) என்பார்கள் அதனை எல்லாம் பசுமைக்குடில் ,சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி செய்ய கடினம் என்ற அடிப்படை விவசாய புரிதல் கூட இல்லை அவருக்கு.

அவர் சொன்னது எப்படி இருக்கு என்றால் ஏற்கனவே கல்யாணம் செய்து 5 ஆண்டுகளில் 6 குழந்தைப் பெற்றவனிடம், கல்யாணம் ஆகி 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் , பின்னர் விந்து தானம் பெற்று செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பெற்றவன் சொன்னானாம் நீ எல்லாம் என்ன பிள்ளை பெற்றாய் என்னப்போல விஞ்ஞான முறையில் லட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைப்பெற்றுக்கொள் என்று.அந்த அதிசய குழந்தையோ இன்குபேட்டரில் இப்பவோ, அப்பவோனு இழுத்துக்கொண்டிக்கிறதாம்!

இவ்வளவும் சொன்ன அந்த விஞ்ஞானிக்கு தற்கால சூழலில் சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது என தெரியாமல் போனது ஏன்? ஒரு வேளை மொழிப்படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற கடந்த காலத்தில் வாழும் ஆசாமியோ அல்லது பொய் சொல்வது பாவம் இல்லை என மார்க்கத்தில் விதி விலக்கு இருக்குமோ என்னவோ :-))

சவுதி அரேபியாவின் இன்றைய விவசாயக்கொள்கை மற்றும் நிலையை கீழ்கண்ட சுட்டிகளில் போய் அறியலாம்:

1)கோதுமை சரிவு

2) சவுதி புதிய விவசாயக்கொள்கை

3) சவுதி அரேபிய 

4) கோதுமை இறக்குமதி

5) கோதுமை vs தண்ணீர்

இந்திய விவசாயத்தில் என்ன தான் பிரச்சினை,

இந்தியாவில் நதி நீர்ப்பங்கீடில் சில சில தாவாக்கள் இருந்தாலும் தண்ணீர் தக்கி முக்கி வந்துவிடும், இல்லை இயற்கையாக மழை கைக்கொடுத்து விடும், வானம் பொழிகிறது, விவசாயி அலுக்காமல் உழைக்கிறான், பூமி விளைகிறது. பசுமைக்குடில், சொட்டு நீர் போன்ற குட்டிக்கரணம், தந்திரம் எல்லாம் பெரும்பாலும் தேவை இல்லை இயற்கையாகவே நல்ல விளைச்சல் இருக்கு.

விவசாயின் பெரும் பிரச்சினையே, விவசாயம் செய்ய ஆகும் செலவை விட குறைந்த விலைக்கு உற்பத்தியை விற்க வைக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவது தான்.

உரம் , விதை, மின்சாரம், டீசல், ஆட்கூலி எல்லாம் வேகமாக விலை ஏறுகிறது விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை. மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருள் கிடைக்க வேண்டும் என அரசு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை மிக குறைவாக வைத்துள்ளதே காரணம்.

குறைந்த பட்ச விலை தான் அது. அதற்கு மேல் விலை வைத்து வியாபாரிகள் வாங்கக்கூடாது என்று சட்டம் இல்லை ஆனால் அவர்களோ அடி மாட்டு விலைக்கு தான் கேட்பார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு பின் அரசு கொள்முதல் நிலையங்களை மூடி விடும், அல்லது சில சமயம் அளவைக் குறைத்து விடும் அது போன்ற சந்தர்ப்பங்களில் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம் மிக குறைந்த விலைக்கே கேட்பார்கள். விவசாயிக்கு உள்ள பணத்தேவைக்கு குறைந்த விலைக்கு விற்பதை தவிர வேறு வழி இல்லை.

சவுதி அரேபிய அரசு சர்வதேச சந்தை விலையை விட 10 மடங்கதிகமாக அரசு விலையாக வைத்து விவசாயம் செய்ய தூண்டியது. காரணம் ஏராளாமாக இருந்த எண்ணைப்பணம்,ஆனால் அது போல நீண்ட காலம் செய்ய அவர்களுக்கு முடியவில்லை.

இந்திய விவசாயிகளுக்கு அது போல 10 மடங்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம், உற்பத்தி செலவை ஈடுகட்டும் வகையிலும் கொஞ்சம் லாபம் தரும் வகையில்  நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 1500 ரூ என்று நிர்ணயித்தாலே போதும் பிச்சு உதறிடுவாங்க நம்ம விவசாயிகள்.

குறைவான கொள்முதல் விலை, ஆட்ப்பற்றாக்குறை, விளை நிலங்கள் வீட்டு மனை என மாறுவது போன்ற இக்கட்டான சூழலிலும் அரிசி, கோதுமை உற்பத்தியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலே இருக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.விரயம் இல்லாமல் சந்தைப்படுத்துதல் மற்றும் நியாயமான விலை மட்டுமே இன்றைய நிலையில் விவசாயிக்கு தேவை.

விவசாயம் குறித்த இப்பதிவுகளையும் பார்க்கவும்

1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2







Saturday, January 14, 2012

புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!







தை-1 இல் புத்தாண்டு கொண்டாடப்படும் என அரசு அறிவித்தவுடன் வலைப்பதிவுலகில் பல்வேறு ஆதரவு , எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பிவிட்டது.ஆதரவு தெரிவித்தவர்கள் கூற்று நியாயமாக இருந்தது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதோ வறட்டு விவாதமாக ஒலித்தது.

மாற்றியது தவறு என சொன்னப் பலப்பதிவுகளிலும் , இது சரியான மாற்றம் தான் எனப்பல பின்னூட்டங்கள் இட்டு சொன்னப்போதிலும், அவை சரியானப்படி நிறையப்பேரை சென்றடையவில்லை , எனவே ஒருப்பதிவாக இட்டு எனது கருத்தைப் பதிவு செய்து வைக்கிறேன்.

தைப்புத்தாண்டு தேவையில்லை என்பவர்களின் வாதம்,

1) ஏப்ரலில் வருவது தான் சரி,
2) காலம் காலமாக வருவது
3)விஞ்ஞான முறைப்படி அது சரியானது.
4) தைப்புத்தாண்டு என்பது யாருக்கும் தெரியாத வழக்கில் இல்லாத ஒன்று, திடீர் என அரசு எதேச்சதிகாரமாக அறிவித்துள்ளது

இவை தான் முக்கியமான குற்றச்சாட்டாக எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது. அவர்கள் சொல்வது சரியல்ல என்பதை விளக்கவே இப்பதிவு.

ஏப்ரலில் புத்தாண்டு வருவது சரியா?

அப்போது தான் கோடைக்காலம் துவங்குகிறது அதனால் அப்போது வரவேண்டும் என்கிறார்கள், அது அப்படி இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம். எத்தனையோ பருவங்கள் இருக்க ஏன் கோடையில் வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தைப்பொங்கலில் இருந்தே கோடையின் துவக்கம் நமக்கு ஆரம்பிக்கிறது, அறுவடை எல்லாம் முடிந்திருக்கும் அப்போது.எனவே அப்பருவத்தின் துவக்கத்தினை புத்தாண்டாக வைத்தால் என்ன?

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது அதனால் "summer solstice " மார்ச் 21 இல் வருவதை ஒட்டி புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாலாம் என்கிறார்கள்.(ஆனால் உண்மையில் இந்தியக்காலண்டர்கள் லுனி சோலார் காலண்டர்கள், தமிழ் காலண்டர் முழுக்க சூரியக்காலண்டர் )

சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் வருடாந்திர பயணத்தின் அடிப்படையில் ஒன்று அதன் துவக்கத்தில் அல்லது இறுதியில் இருந்து ஆண்டை ஆரம்பிக்கலாமே, ஏன் இடையில். இதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சூரியன் என்பது நிலையானது , அது நகர்வதில்லை ஆனால் பூமியின் சுழற்சி, அதன் 23.5 கோண சாய்வு ஆகியவற்றால் நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது, அதன் அடிப்படையிலே இரவு பகல், பருவக்கால மாற்றங்கள் ஏற்படுகிறது.

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது பூமியின் சுழற்சியால், இது தினசரி சூரியனின் நகர்வு நிகழ்வு எனக்கொள்ளலாம்,

இதே போல சூரியனின் வருடாந்திர நகர்வு நிகழுவும் இருக்கிறது, இதற்கு காரணம் பூமி அதன் அச்சில் 23.5 கோணாம் சாய்வாக சூரியனை சுற்றிவருவது.

பூமியை வடக்கு தெற்காக இரண்டு பாதியாக பூமத்திய ரேகை பிரிக்கிறது, பூமி மீது இது போன்ற வளையங்களாக செல்லும் கற்பனைக்கோடுகளே அட்ச ரேகைகள் எனப்படுகிறது.

இதில் முக்கியமான வளையங்கள் பூமத்திய ரேகை, மகர ரேகை, கடக ரேகை.

மகர ரேகை தென் கோளத்திலும், கடக ரேகை வடக்கோளத்திலும் வரும் இடையில் பூமத்திய ரேகை.

சூரிய ஓளி செங்குத்தாக பூமி மீது மகர ,கடக ரேகைப்பகுதிக்குள் மட்டுமே விழும்.

ஒரு ஆண்டில் சூரியன் இரண்டு வளையங்களுக்கும் இடையே சென்று வருகிறான்.பூமி சாய்வாக சுழல்வதால் அப்படி தோன்றுகிறது.

ஜூன் மாதத்தில் (ஜூன் 24) சூரியன் வடக்கோள கடக ரேகையில் இருந்து தென்கோள மகர ரேகைக்கு தெற்கு நோக்கிய பயணத்தை துவங்கி , இந்திய முறைப்படி ஜனவரி 14 இல் (சரியான தேதி என்றுப்பார்த்தால் டிசம்பர் 21)மகர ரேகைக்கு வந்து பின்னர் அங்கிருந்து கடக ரேகைக்கு வடக்கு கோளத்தை நோக்கி பயணிப்பான். அதாவது ஆறு மாதம் இந்தப்பக்கம் ஆறு மாதம் அந்த பக்கம் .

இந்த மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள் இதைப்புனிதமானது என்பார்கள்,அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.

எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அது ஏன் சூரியனின் பயணத்தில் இடைப்பட்டக்காலத்தில் ஏப்ரலில் வர வேண்டும்!

மகர ரேகை என்பது இந்தியாவிற்கு தெற்கே கீழே இந்தியப்பெருங்கடலில் உள்ளது அங்கிருந்து இந்தியா நோக்கி சூரியன் வரும் நாளை வருடத்தின் துவக்க நாளாக கொள்வது தவறில்லையே. அதாவது சூரியக்காலண்டர் அடிப்படையில் சூரியனின் பயணம் துவங்குவது முதல் நாள்!

இதனாலேயே ஒருக்காலத்தில் ஆங்கில முறையில் ஏப்ரலில் வந்த புத்தாண்டு கூட ஜனவரிக்கு இடம் பெயர்ந்தது.

wikki இல் இருந்து எடுக்கப்பட்ட உதாரணம்,

//France was one of the first nations to make January 1 officially New Year's Day (which was already celebrated by many), by decree of Charles IX. This was in 1564, even before the 1582 adoption of the Gregorian calendar (See Julian start of the year). Thus the New Year's gifts and visits of felicitation which had been the feature of the 1st of April became associated with the first day of January, and those who disliked or did not hear about the change were fair game for those wits who amused themselves by sending mock presents and paying calls of pretended ceremony on the 1st of April.//

தமிழர்கள் எந்த அளவுக்கு தீர்க்க தரிசனத்தோடு இருந்தால் அக்காலத்திலேயே வரப்போகும் சூரியனை வரவேற்று , சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக்கொண்டாடி இருப்பார்கள்!

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் ஏப்ரலில் வருவது, விஞ்ஞான ரீதியாக சரி என்று சொல்வதெல்லாம் தவறு என்று காட்டி இருக்குமே!

சித்திரை புத்தாண்டு காலம் காலமாக வருவது என்கிறார்கள், அக்காலத்தில் கூட காலம் காலமாக உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம் எல்லாம் இருந்தது அதை எல்லாம் சட்டம் போட்டு ஒழிக்கவில்லையா? அதையும் புனிதமாக நினைப்பவர்கள் இருந்தார்கள் என்று அரசு ஆதரிக்க முடியுமா?

இப்போது அரசு திடீர் என்று மாற்றம் செய்து விட்டது என்று சிலர் சொல்கிறார்களே அது எப்படி ?

1921 இல் திருவள்ளுவர் கி.மு 31 இல் பிறந்தாரரென்ற கூற்றின் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்று உருவாக்கப்பட்டுள்ளது,அதில் தை இரண்டு அன்று புத்தாண்டு வருவதாக மறைமலை அடிகள், திரு.விக, கி.ஆ.பெ எல்லாம் இதுக்குறித்து பல தமிழ் ஆய்வுகள் செய்து தெரிவித்துள்ளார்கள், இதனை அரசும் ஏற்கும் விதமாக வெகு காலம் முன்னரே அரசு நாட்காட்டியில் திருவள்ளுவர் ஆண்டை ஏற்று வெளியிட ஆரம்பித்தது. சில தரமான தனியார் காலண்டர்களிலும் இந்த ஆண்டு முறை இடம் பிடிக்க ஆரம்பித்தது.

தற்போது ஏற்கனவே பலகாலமாக இருந்த ஒன்றுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் வண்ணம் அரசாணை வெளியிட்டுள்ளது. தை இரண்டு என்பதற்கு பதில் முழுதாக தை 1 என்ற சிறிய திருத்தம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.


எனவே இந்த அறிவிப்பு ஒன்றும் திடீர் புரட்சி அல்ல, பலகாலமாக இருந்து வந்த தமிழறிஞர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது அரசு.


பின்குறிப்பு:

இது ஒரு மீள்ப்பதிவுங்கோ!!!

Thursday, January 12, 2012

குமுதம் யாருக்கு சொந்தம்?



                                                    

          குமுதம் யாருக்கு சொந்தம்?




திரு எஸ்.ஏ.பி அவர்களால் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட குமுதம் வார இதழ், அவரது மறைவுக்கு பின்னர் பல சர்ச்சைகளின் மையமாக திகழ்கிறது என்பதை வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிவார்கள்.இப்போது மேலும் முற்றிய நிலைக்கு போய்விட்டது மிகவும் வருந்த தக்கது.

ஏனோ இந்த பிரச்சினைக்குறித்து ஊடகங்களும் ஒரு திருட்டு மவுனம் பூண்டு(வெங்காயம் மிஸ்ஸிங்கோ?) இருக்கின்றன. என்றே தோன்றுகிறது. வழக்கமாக சிறிய விஷயத்தையும் ஊதிப்பெரிதாக்கும் துப்பி எறியும் பத்திரிக்கைகளும் மவுனகுருவாக இருக்கின்றன. நடிகர்,நடிகையரின் அந்தரங்கம் என்றால் காணாததையும் கண்டதாக எழுதுவார்களாயிருக்கும். :-))

இதை விட ஆச்சர்யம் எல்லாத்துக்கும் கருத்து கண்ணாயிரமாக பதிவுப்போட்டுத்தள்ளும் பதிவர்களும் கோந்து அல்வா சாப்பீட்ட கோவிந்தனாக கம்மென்று இருக்கிறார்கள். ஒரு வேளை எல்லாம் எனக்கு தெரியாம  பதிவுப்போட்டு இருக்காங்களோ?

சரி இந்த வார குமுதம் பத்திரிக்கையில் வந்துள்ள பகிரங்க அறிக்கையில் இருந்து மேட்டர்(இது சமாச்சாரத்த சொன்னதுப்பா) என்னனு பார்ப்போம்...

திரு .ஜவகர் பழனியப்பன் த/பெ. எஸ்.ஏ.பி, அவர்கள் அமெரிக்க பிரஜ்ஜை என்பதால் குமுதம் நிறுவனப்பங்குகளுக்கு உரிமைக்கோர இயலாது, அது இதழியல்/ அச்சக சட்டங்களுக்கு முரணானது.

திருமதி.கோதை பழனியப்பன் ,தன்னிச்சையாக குமுதம் நிர்வாகத்திற்கு சேர்மன், மற்றும் நிர்வாக இயக்குநராக அறிவித்துக்கொண்டாராம்..மேலும் ஓரு இடைக்கால தடையும் வாங்கினாராம்.(எதுக்கான இடைக்கால தடை?) அந்த தடை நிர்வாகத்தினைப்பாதிக்கும் என வரதராஜன் நிறுத்தி வைக்க உத்தரவு வாங்கினாராம்.

பின்னர் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம் முறையாக அறிவிக்கப்பட்டு மூன்று முறைக்கூடியுள்ளதாம். இப்போது யார் நிர்வாக இயக்குநர்,, சேர்மன் என்ற சர்ச்சை நீடிக்கும் போது யாருக்கு கூட்டம் கூட்ட அறிவிப்பு கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது ஒரு நல்ல கேள்வி இப்போ நீங்க கேட்கணுமே? கேட்டாச்சா...சரி அடுத்துப்போவோம்.

முறையே 20-9-2011,10-10-2011, மற்றும் 2--01-2012 ஆகிய நாட்களில் கம்பெனி இயக்குநர்களின் நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில் திரு.ஜவகர் பழனியப்பன், திருமதி.கோதை பழனியப்பன் ஆகியோர் கலந்துக்கொள்ள தவறியதால் ,அவர்கள் இயக்குநர்கள் என்ற பொறுப்பையும் இழந்துவிட்டார்களாம். எனவே இனிமேல் மேற்கொண்டவர்களுடன் யாரும் குமுதம் தொடர்பாக தொடர்புக்கொள்ளக்கூடாதாம்.

இப்போது என்னுள் சிலக்கேள்விகள்,

# கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கு இப்போது ஒரு நிர்வாகம் அதே பிரச்சினையின் மீதே இயக்குநர்கள் கூட்டத்தினை வைத்தே தீர்ப்பு சொல்ல முடியுமா? பின்னர் கோர்ட் எதுக்கு?

#மேலும் மிக குறுகிய காலத்தில் ஏன் மூன்று இயக்குநர்கள் கூட்டம் நடத்தப்பட்டது? அவர்கள் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதற்காகவா? இங்கு கவனிக்க வேண்டியது குமுதம் அலுவலகம் செல்ல காவல் துறைப்பாதுகாப்பினை இருவரும் கேட்டு மறுக்கப்பட்டுள்ள ஒரு சூழல்.

# சர்ச்சைக்குறிய நிலையில் இக்கூட்டத்தை கூட்டும் அதிகாரம், தலைமை தாங்கும் பொறுப்பு யாருக்கு?

# கணவரின் சொத்துக்கு மனைவி பாத்தியதை இல்லையா?

#தந்தையின் சொத்துக்கு மகன் பாத்தியதை இல்லையா, அவர் வெளிநாட்டில் வாழ்ந்து ,அங்கேயே குடியுரிமைப்பெற்றிருந்தாலும்.

#நியமிக்கப்பட்ட ,அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர்,ஆனால் அது அவரது சொத்து அல்ல என்றாலும் உரிமைக்கொண்டாட முடியுமா?

# இந்து பிரிக்கப்படாத குடும்ப சொத்துரிமை சட்டம் இதில் செல்லாதா?

இப்போ குமுதம் யாருக்கு தான் சொந்தம்? தெரிஞ்சா சொல்லுங்க யாராவது.


பின் குறிப்பு:

மேல் நிலைப்பள்ளி, கல்லூரிக்காலங்களில் பலப்பத்திரிக்கைகளுக்கும் அதிகம் எழுதி அனுப்புவேன்(5 ஆம் வகுப்பிலேயே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டேன், எப்போவாது கல்கண்டு, சூப்பர் நியூஸ் (சூப்பர் நாவல்,-சுபா வகை) அதில் வரும்) பெரும்பாலும் கிணறு-கல் தான். ஆனால் குமுதத்தில் மட்டும் அவ்வப்போது வரும், ஒரு நம்பிக்கையை தரும். பல பத்திரிக்கைகளிலும் பெரும்பாலும் வாசகர் கடிதம் வரும். பிலாக் ஆரம்பித்த காலத்திலிருந்து அனுப்புவதில்லை, நாம எழுதி, இவனுங்க என்ன பரிசீலனை செய்றது என்ற ஒரு எண்ணம் தான்(கொஞ்சம் ஓவர் குசும்பு உனக்குனு சொல்வது கேட்கிறது).அக்காலத்தில் அச்சில் அடிக்கடி நம்ம பேரைப்போட்ட குமுதத்தில் புகைச்சல் என்பது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக நெருடவே செய்கிறது.